Wednesday 20 May 2015

Student's creations 010 - G.K.DINESH

இனி வரும் காலமும் வருங்காலமும் !! - கவிதை

இந்த நான்கு ஆண்டுகள் பழகி கழித்தோம்
இனிவரும் ஆண்டுகள் எப்படி உன்னை பார்க்காமல் கழியும் ??

இனி புகைப்படத்தில் மட்டுமே சிரிப்பொலியை கேட்க முடியும்

எடுத்துக் கொண்ட புகைப்படங்களோடு மீதி வாழ்க்கையை வாழ வேண்டி வரும்

இனி சாப்பாட்டு தட்டில் ஒரு கை மட்டுமே இருக்கும் அதுவும் உன் கையாக தான் இருக்கும்

ஸ்லாம் புக்கை திருப்பி பார்த்து பார்த்து பேப்பரில் அழுக்கேறி இருக்கும்

நாளாக நாளாக எழுத்துக்கள் கூட அழிந்து விடும்

இருந்தாலும் உண்மை நண்பனின் நினைவுகள் என்றுமே அழியாமல் நிலைத்திருக்கும்

போனில் உள்ள அலாரம் இனி தேவைப்படாது

இனி வித விதமான சட்டைகளை அணிய முடியாது

அப்படியே அணிந்தாலும் அதில் நண்பனின் வியர்வை வாடை இருக்காது

விண்ணை பிளந்த விசில் சத்தம் இருக்காது

சுதந்திரமாய் திரியும் பறவைகளை பார்த்து பொறாமை பட வேண்டி வரும்

எப்போது எடுத்து எழுதுவோம் என பேனா கூட அழ கூடும்

தினமும் வேலைக்கு செல்ல வேண்டி வரும்

பீர் பாட்டில் பிராந்தி பாட்டில் ஆகும்

எந்த கட்டாயத்திற்காகவும், யாருடைய கட்டாயத்திற்காகவும் இனி புத்தகத்தை எடுக்க தேவையில்லை

அப்பா அம்மா என்ன தான் கனிவுடன் பேசினாலும் குற்றவுணர்வு இருக்கும்

இனிவரும் பிறந்த நாட்களை யார் கொண்டாடுவார்கள்??

நள்ளிரவில் யார் மூஞ்சியில் கேக் பூசி விளையாடுவது ??

மழை வந்தால் யாருடன் நனைந்து விளையாடுவது ??

நாலு வருடங்கள் பழகிய நண்பர்களை பிரியவே  கஷ்டப்படுகிறோம் நாம்

ஒவ்வொரு வருடமும் நான்கு வருடங்கள் பழகிய நண்பர்களை பிரியும் கல்லூரியை நினைத்து பார்த்து மனதை தேற்றி கொள்ள தோன்றும்

இனி ஆட்டம் இருக்காது

இசை இருக்காது. இருந்தாலும் ரசிக்க தோணாது

கால் கிலோமீட்டர் நடக்க கூட மூச்சு வாங்கும்

மீண்டும் கல்லூரிக்கு செல்ல முடியாதா என மனது துடிக்கும்

வார்த்தைகள் பல இருந்தும் பேசுவதற்கு வார்த்தைகளை தேட வேண்டி வரும்

தொண்டை கனக்கும்
உடல் விம்மும்
நாடி துடிக்கும்
உதடு உதறும்
பேச்சு பதறும்

கைகள் தோள்களை தேடும்
ஒன்றாய் சுற்ற கால்கள் தேடும்

காட்டிலிருந்து வெட்டி வீசப்பட்ட தனிமரமாய் தனிமையில்

நாலு ஆண்டுகள் யாரிடம் பழகாமல் இருந்திருக்கலாமோ எனக் கூட தோன்றும்

யார் யாருக்கு எப்படிப்பட்ட மனைவி/கணவன் என்பதை பொறுத்து தான் இனி நம் நட்பும் !!!

இனி வரும் காலமும், வருங்காலமும் நல்லதாகவே அமையட்டும்.....................

வாழ்த்துகள் !!

-கண்ணீருடன்,
ஜி.கே.தினேஷ்
இறுதியாண்டு இளமறிவியல் வேளாண்மை
2011-2015
17.05.2015 இரவு 11.45 மணி

No comments:

Post a Comment